November 5, 2009
ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - கும்ப ராசி
எப்போதும் உயர்ந்த சிந்தனையோடும், சுய கவுரவத்தோடும் வாழும் கும்ப ராசி அன்பர்களே, உங்களை விட தகுதி கூடியவர்களிடம் மட்டும் சகவாசம் வைத்து இருப்பீர்கள். எந்த நிலையிலும் யாருடைய தயவையும் நாடாமல் இருக்க விரும்புவீர்கள். இப்போது ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கும்பத்திற்கு செல்வது மிகச்சிறப்பான இடம் ஆகும். அவரால் இதுவரை இருந்து வந்த பிரச்சினை இனி இருக்காது, பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். ராகு நன்மை தரும்போது கேதுவால் நன்மை கிடைக்காது, கேது இப்போது 5-ம் இடமான மிதுனத்திற்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். எந்த தடைகளையும் முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். எனவே வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். டிசம்பருக்கு பிறகு நிலைமை சீரடையும். வீடு மனை வாங்கும் எண்ணம் படிப்படியாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். இதனால் சில குடும்பத்தில் தற்காலிகமாக பிரியும் நிலைகூட உருவாகலாம். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். டிசம்பருக்கு பிறகு வீட்டில் நிலைமை சற்று முன்னேற்றம் காணும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். பிள்ளைகள் வகையில் அனுகூலமான போக்கு இல்லை. அவர்களால் எந்த உதவியும் கிடைக்காது. உத்தியோகம் பார்ப்பவர்கள் சுமாரான நிலையில்தான் இருப்பர். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களை அண்டி இருக்கும் ஒருவித மந்த நிலை டிசம்பருக்கு பிறகு மறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இடமாற்றம் ஏற்படலாம். சற்று முயற்சி செய்தால் கோரிக்கைகள் நிறைவேறும். வேலையின்றி இருப்பவர்கள் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், வக்கீல்கள் போன்றோர் கடந்த காலத்தை விட நல்ல வளம் காணலாம். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வியாபாரத்தில் ராகுவால் லாபம் தொடரும். புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். இது அஷ்டமத்து சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். இருப்பதை பயன்படுத்தி முன்னேற வழிகாணுங்கள். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். பகைவர்களின் இடைïறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பாராட்டு புகழை விட பொருளாதார வளத்தில் மேம்பாடு காண்பீர்கள். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்காது. மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் மிகவும் பிற்போக்கான நிலையிலேயே இருந்திருக்கலாம். இனி நிலைமை மாறுபடும். ஆனாலும் கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதிருக்கும். முயற்சி எடுத்தால் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயத்தில் சீரான வருவாயை காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் விளைச்சல் அதிகரிக்கும். சிலர் புதிய சொத்து வாங்குவர். பெண்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வர். குடும்ப மேம்பாட்டுக்காக கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். வீண் மன உளைச்சல் மறையும். ஆனால் கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம். குறிப்பாக பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை முன்னேற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறுவீர் சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியாக வீட்டிற்கு குடிபுகுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிணக்குகள் மறையும். சனியால் சிலரது வீட்டில் கருத்துவேறுபாடு தொடரலாம். ஒருவருக்குகொருவர் விட்டுக்கொடுத்து போகவும். வேலையில் பின்தங்கிய நிலை மறையும். பல சிறப்பான பலனை காணலாம். வேலையில் பளு குறையும். விருப்?மான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடவும். உங்கள் ஆற்றல் தொடர்ந்து மேம்பட்டு இருக்கும். புதிய பதவி கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு வரும். சக ஊழியர்கள் உதவி கரமாக இருப்பர். வேலையின்றி இருப்பவர் களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்துக்கு குறை இருக்காது வருமானம் அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டிய திருக்கும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தை காணலாம். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். உங்கள் அறிவை பயன்படுத்தி முதல்போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். ஜனவரிக்கு பிறகு அனுகூலம் அதிகம் கிடைக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். மாணவர்கள் சிறப்பான பலனை காணலாம். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசிடம் இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை பார்க்கலாம்.. சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். பெண்கள் குதூகலமான பலனை காண்பர். கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகள் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டவும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச்செலவு குறையும். பரிகாரம்:- ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். துÖக்கைக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுங்கள். சனி சிறப்பாக இல்லாததால் நீங்கள் சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். ஏழைக் குழந்தைகள் படிக்க உதவி செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பத்திரகாளி அம்மனை வழிபடுங்கள்.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - மகரராசி
மதிப்பு, கவுரவத்தோடு வாழ விரும்பும் மகரராசி அன்பர்களே நீங்கள் மனைவி மக்கள் என தன்குடும்பத்தினர் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டு இருப்பீர்கள். எப்போதும் செல்வாக்கோடு வாழ நினைப்பீர்கள். கேது நன்மை தரும் இடத்திற்கு வந்துள்ளார். அவர் இப்போது 6-ம் இடமான சிம்மத்திற்கு வந்திருப்பதன் மூலம் அந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும். மேலும் பொன்னும் பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். கேது நன்மை தரும் காலத்தில் ராகுவால் நற்பலனை தரஇயலாது. அவர் இடம்மாறி 12-ம் இடமான தனுசுவிற்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. இங்கு அவர் பொருள் விரயத்தையும், தூரதேச பயணத்தையும் கொடுப்பார். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொருளாதார வளம் மேம்படும். தடைகள் விலகி எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அலைச்சலும் பளுவும் கூடும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். ஆனால் சனியால் பங்கம் வரலாம். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு வாகனம் வாங்கலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் டிசம்பருக்கு பிறகு நல்ல வரனாக அமையும். உறவினர்கள் வகையில் பிணக்குகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அல்லது அவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை வெளிïர் மாற்ற வேண்டியது இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். வேலையில் பல்வேறு அனுகூலங்கள் நடக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். சிலர் பக்கத் தொழில் செய்து, வருவாயை அதிகரிக்க செய்வர். எதிர்பாராத மாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. வருமானம் அதிகரிக்கும். அதற்காக அசட்டையாக இருந்து விடாதீர்கள். சிந்தித்து தீரமாக உழையுங்கள். முன்னேற வழி கிடைக்கும். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை வந்தாலும் உடலை வருத்தி வளர்ச்சி காண்பீர்கள். எந்த தொழிலிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். அறிவை பயன்படுத்தி வருமானத்தை காணலாம். எதிரிகளின் இடைïறை முறியடிப்பீர்கள். கலைஞர்கள் நல்ல புகழையும் பாராட்டையும் குரு பகவான் கொடுப்பார். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணச்செழிப்பிலும் எந்த குறையும் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சிறப்பு அடைவீர்கள். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடம் பெறலாம். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகள் நல்ல வருவாயோடு காணப்படுவர். மகசூல் அதிகரிக்கும். குறிப்பாக நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் பயறுவகைகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். கைதொழில் செய்பவர்கள் மனநிம்மதியுடன் காணப்படுவர். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பம் உங்களால் சிறப்பு அடையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை கேதுவின் நன்மையும் தொடரும். இதன் மூலம் நல்ல பணப்புழக்கத்தை காணலாம். அதே நேரம் செலவுகள் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை முன்புபோல் இருக்காது என்றாலும் உங்கள் கவுரவத்திற்கு பங்கம் ஏதும் வராது. வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் வசதிகள் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.. கணவன்-மனÛவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் குருவின் பார்வையால் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலம் இருக்கும். புதிய வீடு, மனை வாங்க நினைப்பவர்கள் அதிக முயற்சி எடுத்தால்தான் நிறைவேறும். உத்தியோகத்தில் கடந்த காலத்தை போல் மிக உயர்வான பலன் கிடைக்காது. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் உழைப்புக்கேற்ற வருமானம் இருக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். சிலருக்கு வேலையில் பங்கம் வரலாம். சிலர் பொறுப்புகளை பறிகொடுக்கலாம். எனவே வேலையில் கவனமாக இருக்கவும்.. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரம் சீராக நடக்கும். கேதுவின் பலத்தால் லாபத்தில் எந்த குறையும் வராது. அலைச்சல் இருக்கும். வெளிïர் வாசம் இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தை காணலாம். வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெறுவர். புதிய தொழில் சுமாரான வருமானத்தை கொடுக்கும். அரசு உதவி கிடைக்கும். ஜனவரிக்கு பிறகு அனுகூலம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய புதிய ஒப்பந்தத்திற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். பண வரவு குறையாது. எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசிடம் இருந்து பாராட்டு. விருது போன்றவை சிலருக்கு கிடைக்க தாமதம் ஆகலாம். மாணவர்கள் சீரான பலனை காணலாம். தீவீர முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். அதற்காகமோசமான நிலை உருவாகாது, குருவின் பார்வையால் கல்வியில் சிறப்பு கிடைக்கும். விவசாயத்தில் உழைப்பிற்கு ஏற்ற பலனை காணலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். நவீன விவசாயத்தை பயன்படுத்தி நல்ல விளைச்சலை காணலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.பெண்கள் குதூகலமான பலனை காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பரிகாரம்: ராகு சிறப்பாக இல்லாததால் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். திருநாகேசுவரம் சென்று வரலாம். சனிக்கிழமை சனிபகவானை அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். கணவரை இழந்த மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதன் மூலம் தடையின்றி முன்னேற்றம் அடையலாம். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.துர்க்கை வழிபாடு தொடர வேண்டும். மேலும் குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள் -தனுசு ராசி
குறிப்பிட்ட இடத்தை தாக்கும் அம்புபோல் குறிப்பிட்ட இலக்கை நோக்கி செல்லும் தன்மை கொண்ட தனுசு ராசி அன்பர்களே குடும்பத்தினர் மீது அதிக பாசம் கொண்டவர்கள். பெரியோர்களிடம் நன்மதிப்பு வைத்திருப்பீர்கள் ராகு உங்கள் ராசிக்கு வந்துள்ளார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். கேது இப்போது 7-ம் இடமான மிதுனத்துக்கு வந்திருக்கிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. இப்போதும் அவர் மனைவி வகையில் பிரச்சினையையும், அலைச்சலையும் தரலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பொருளாதார வளம் சீராக இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வருமானம் வரும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மதிப்பு மரியாதை கூடும். அதே நேரம் டிசம்பர் மாதத்திற்கு பிறகு வீண் விரோதத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். சிலர் சற்று முயற்சி செய்து புதிய வீடு-மனை வாங்கலாம். அதுவும் டிசம்பர் மாதத்திற்குள் கைகூடலாம். அதே போல் சுப காரியங்களும் டிசம்பருக்குள் நடந் தேறும். கணவன்- மனைவி இடையே அன்பு இருந்தாலும் அவ்வப்போது பிரச்சி னைகள் வரத்தான் செய்யும். நவம்பருக்கு பிறகு பிரிந்த குடும்பம் ஒன்று சேர வாய்ப்பு உண்டு. ஆனாலும் கூட அவ்வப்போது கருத்துவேபாடு வரத்தான் செய்யும். அனுசரித்து போவது நல்லது. பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டில் நிலவிய திருட்டு சம்பவங்கள் மறையும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். பதவி உயர்வு. சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுகூலமாக இருப்பர். இந்த சாதகமான போக்கு டிசம்பருக்குள் கிடைக்கலாம். அதன்பின் வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சலும் இருக்கும். சிலர் பொறுப்புகளை இழக்க நேரிடலாம். கலனம் தேவை. உங்கள் கோரிக்கைளை தீவிர முயற்சி எடுத்து நிறைவேற்றிக் கொள்ளவும். வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். லாபம் அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்த மந்த நிலை மறையும். புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரம் தொடங்கலாம். புதிய தொழிலை டிசம்பருக்குள் ஆரம்பிக்கலாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். பகைவர்களின் இடைïறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். சிலரிடம் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு. எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பேசவும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகைகள் டிசம்பருக்குள் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள். பாராட்டு புகழை விட பொருளாதார வளத்தில் மேம்பாடு காண்பீர்கள். அரசியல்வாதி கள், ஸ்திர நிலையை பெறுவர். முயற்சி எடுத்தால் புதிய பதவி கிடைக்கும். வெளிநாடு சென்று வருவீர்கள். போட்டிகள் நிலவும். அதை சமாளிக்கவும் தைரியம் வரும். டிசம்பருக்கு பிறகு எதையும் தீவிர முயற்சி செய்தே பெற வேண்டிய திருக்கும். மாணவர்கள் சீரான நிலையில் இருப்பர். சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும், அதே நேரம் குருவின் பார்வை சிறப்பாக அமைந்திருப்ப தால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். விவசாயிகள் நல்ல மகசூலை காண்பர். விளைச்சல் அதிகரிக்கும். குறிப்பாக நெல், சோளம், கேள்வரகு போன்ற பயிர் வகைகள் மூலம் அதிக வருவாய் காணலாம். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம், டி.பி. போன்ற உபாதைகளால் அவதிபட்டவர்கள் நவம்பருக்கு பிறகு பூரண குணம் அடைவர். மருத்துவச் செலவு குறையும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். அதே நேரம் முன்பு போல் இருக்காது. தீவிர முயற்சி எடுத்தால் எதையும் சிறப்பாக முடிக்க முடியும். மதிப்பு, மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். அதே நேரம் கேதுவால் மனைவி வகையில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். சற்று விட்டுக் கொடுத்து போகவும். உறவினர்கள் மத்தியில் அவ்வப்போது சிற்சில மனக்கசப்புகள் வரலாம். சற்று விலகி இருக்கவும். அல்லது அவர்களிடம் அனாவசிய பேச்சை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் எளிதில் கைகூடாது. தாமதம் ஆகலாம். குருவின் வக்கிர காலத்தில் குடும்ப நிலைமை மேம்படும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சீரான நிலையில் இருப்பர். வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். மேலும் வேலையில் இருந்த பிரச்சினைகள் இனி இருக்காது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டு தற்காலிகமாக பிரியவேண்டிய திருக்கும். வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். அதற்காக அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். எதிரிகளின் இடைïறு அவ்வப்போது தலைதூக்கலாம். அவர்கள் வகையில் எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும். அதேபோல் எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். ஜனவரிக்கு பிறகு நிலைமை ஓரளவு சீரடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக பெறமுடியாது. சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல முன்னேற்றம் காண்பர். உழைப்புக்கு தகுந்த மதிப்பெண்கள் கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டு சிறப்படையும். விவசாயத்தில் உழைப்புக்கு ஏற்ற பலனைதான் பெற முடியும். பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும் உடல்நலம் சிறப்பாக இருக்கும். கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். பரிகாரம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை வலம் வரவும். சனிபகவானுக்கு எள்சோறு படைத்து வணங்கலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்க தவறாதீர்கள். ஞானிகள், சன்னியாசிகளுக்கு உதவி செய்யுங்கள். ஏழைகள் படிக்க உதவி செய்யுங்கள். வசதி படைத்த தொழில் அதிபர்கள் முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யலாம். முருகனை தரிசனம் செய்து வாருங்கள். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். காக்கைக்கு அன்னமிடுங்கள்
Subscribe to:
Posts (Atom)