November 12, 2009

யோகங்கள்

Yogas are important combinations in Vedic Astrology. Yogas are formed by planets being angular and well posited. There are 5 main Great Yogas called Mahapurusha Yogas, effectuated by Mercury, Mars, Jupiter, Venus and Saturn.There are 5 main Yogas and there are other minor Yogas. In Vedic Astrology , there are 6 lakh Yogas.

Some of the Yogas are:

 Angular and powerful Jupiter ( either exalted or in own house ) causes Hamsa Yoga.
 Angular and powerful Saturn ( either exalted or in own house ) causes Sasa Yoga.
 Angular and powerful Mars ( either exalted or in own house ) causes Ruchaka Yoga.
 Angular and powerful Venus ( either exalted or in own house ) causes Malavya Yoga.
 Angular and powerful Mercury ( either exalted or in own house ) causes Bhadra Yoga.

If the planet which causes the Yoga is debiliated in Navamsa, then that Yoga gets weakened.

If the planet which causes the Yoga is combust, or helpless in a cuspal degree, that Yoga is nullified. Great care must be exercised while interpreting Yogas.


NEECHABHANGA RAJA YOGA
When a debilitated planet attains cancellation of debilitation, he becomes positve and gives rise to Neechabhanga Raja Yoga.
The clauses for Neechabanga Raja Yoga are

The dispositor of the debilitated planet must be angular, either to the Ascendant or to the Lunar Ascendant or the exaltation dispositor should be angular, either to the Asc or the Lunar Asc.

The native born in Neechabanga Raja Yoga becomes attains regal status and will be righteous ( Raja Bhaveth Dharmika Chakravarthi ).


Raja Yogas are regal Yogas formed when some powerful planets become angular. 16 types of Raja Yogas are formed when Jupiter, Saturn become exalted, Moon is in own house and all are angular.





HAMSA MAHA YOGA

According to the classical texts the person becomes a king extolled by the good ( Artha Dharma Sukhabhak ), will eat pure food & will be of righteous disposition. Jupiter is the planet of Religion & the person not only becomes religious but revives true Religion. ( Guru Dwija Bhakthiadhi Tad Yoga Phalam ). Wealth, righteousness, comforts, devotion to preceptors, beautiful voice, fame and liberality - these are some of the characteristics of Hamsa Yoga. High longevity is also conferred by this yoga. ( Hamsaja Sura Suraschiranjeevi ).


SASHA MAHA YOGA

The native will be well liked by all, equivalent to a king or a minister and is tough- hearted. This yoga is excellent for careers in police and military. They will enjoy all the pleasures of life. On the negative side this yoga indicates a voluptuary inclined to play the role of paramour towards the objects of his guilty love. They may be considered wicked by many . They will be famous & will be the leaders of their family.Fame, wealth and glamour automatically flow to them. There will be love for mother and motherland ( Bhakhto Jananyam ). They will be able to know the guilts of other people.



MALAVYA YOGA

The person born under this yoga lives upto 70 years and enjoys all the comforts of life. Fame and reputation are natural to a Malavyan.Will be very attractive to the opposite sex. As Venus represents the libido of the Cosmic Man, all sorts of gratification will be enjoyed by them. Their attractiveness, ability and personal magnetism will be the envy of many. Venus is the planet of Love and they will be very successful in this field.


BHADRA MAHA YOGA


The person born under this yoga becomes a scholar and with good longevity. Mercury represents academic education and educational attainments of no mean order will be bequethed by this yoga. Learning, knowledge excellence in all arts and sciences will be bestowed. Fame and reputation automatically develop. People will come in search of them from foreign lands. Their personal magnetism and charisma will be a source of attraction for people. Scientific skill, oratorial prowess, artistic skill mark this great Yoga. ( Vagmee Padu ).


RUCHAKA MAHA YOGA

People born under this yoga become famous & become good generals and military officers. Military and police efficiency develops. Wealth, fame and reputation are the hallmarks of this yoga. Fame develops to all parts of the globe . Works for the benefit of others. People come from far away lands in search of them due to their wisdom and pragmatism. Knowledge & wisdom come to them automatically. Enemies get defeated as a result.

NIPUNA YOGA

Nipuna Yoga is formed when Mercury and Sun are together.High skill, intelligence and fame are some of the characteristics of this yoga which is also called Budha_Adithya Yoga.


GAJAKESARI YOGA

Angular Jupiter, angular to the Moon confers Gaja Kesari Yoga." Sahasra Masecha Jeevitham " meaning that they will live upto 1000 lunar months. Minimum longevity 70 / 80 years. Will have tremendous oratorial capacity which can move audiences as a monarch sways his dominions. They will be the leader of their place, reputed and famous, Uninterrupted influx of income.


ADHI YOGA
Adhi Yoga results when the lunar 6th, 7th and 8th positions are occupied by major planets. The result of this yoga is wealth and fame. They will be the leaders wherever they are placed. They will be above want.


VESI YOGA
When the solar 2nd is tenanted by major planets, Vesi Yoga results. Fame health and wealth will be conferred by this yoga. Financial stability can be expected. They will be known as orators.


VASI YOGA
Vasi yoga results when the solar 12th is tenanted by major planets. Financial stability, health and fame are indicated.They will be known as pious people amidst their circle.


UBHAYACHARI YOGA
When the solar 12th & 2nd houses are tenanted by major planets, Ubhayachari results. They will be knowledgeable, strong with handsome features, will have good relatives, of regal status, very enthusiastic, with oratorial prowess & famous.

November 5, 2009

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - மீனராசி

ரகசியங்களை காப்பாற்றுவதில் வல்லவரான மீனராசி அன்பர்களே நீங்கள் ஞானிகளிடமும் பெரியோர்களிடமும் மிகுந்த மரியாதை கொண்டவர்கள் எந்த பிரச்சினையிலும் சிக்காமல் நழுவிவிடும் தன்மை படைத்தவர்கள். உங்களுக்கு ராகு 10-ம் இடமான தனுசிற்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. இங்கு அவர் பொருள் இழப்பையும் சிறு சிறு உடல்உபாதைகளையும் கொடுப்பார். ராகுவுக்கு இணையான நிழல் கிரகம் கேது 4-ம் இடமான மிதுனத்திற்கு மாறுகிறார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவர் உங்களை தீயோர் சேர்க்கைக்கு ஆளாக்கலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். டிசம்பர் முதல் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. எதையும் சற்று சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியது இருக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். ஆனால் டிசம்பருக்கு பிறகு வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. பணப்புழக்கம் அதிகம் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனால் சனியால் சிற்சில பிரச்சினை வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். டிசம்பருக்குள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதன்பின் சுபங்கள் தாமதப்படலாம். பிள்ளைகளாலும் பிரச்சினை வரலாம். அதிக முயற்சி எடுத்தால் புதிய வீடு கட்டலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டியதிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பர். டிசம்பருக்குப் பின் வேலையில் பளு அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத வகையில் இடமாற்றம் காண்பர். முதலில் அது பிடிக்காததாக இருந்தாலும் போகப்போக அது விருப்பமானதாக அமையும். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும். வேலை நிமித்தமாக சிலருக்கு குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலையும் உருவாகலாம். வியாபாரிகள் சிரத்தை எடுத்து முன்னேற வேண்டியது இருக்கும். லாபம் கிடைக்கும். அதேநேரம் செலவும் அதிகரிக்கும். தொழிலில் சிற்சில பிரச்சினை வரலாம். எனவே அதிக கவனம் தேவை அரசு வகையில் அனுகூலம் கிடைக்காது. வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை இருக்கும். கலைஞர்கள் தொடக்கத்தில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கும். ஆனால் டிசம்பருக்கு பிறகு சிரத்தை எடுத்தால்தான் ஒப்பந்தங்கள் வரும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். பொருளாதார வளம் இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைக்காது. மாணவர்கள் இந்த ஆண்டு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும் ஆசிரியர்களின் அறிவுரை உகந்ததாக இருக்கும்.. சிலருக்கு விரும்பிய பாடம் கிடைக்காமல் போகலாம்.. விவசாயம் சீராக நடக்கும். அதிக உடல்உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். கணவரின் அன்பு கிடைக்கும். அதே நேரம் குடும்ப நன்மைக்காக விட்டுக் கொடுத்து போக வேணடியது இருக்கும். வழக்குவிவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். கேதுவால் சிறுசிறு உபாதைகள் வரலாம். பிள்ளைகள் உடல் நலனிலும் அக்கறை காட்ட வேண்டிய திருக்கும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை இது அவ்வளவு சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. அவ்வப்போது தடங்கல்கள் குறுக்கிடலாம். எது எப்படியானாலும் அதனை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். பணப் புழக்கம் சீராக இருக்கும். மதிப்பு மரியாதை கூடும். அதே நேரம் அனாவசியமாக எதிலும் மூக்கை நுழைக்காமல் இருக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். சனி மற்றும் ராகுவால் சிற்சில பிணக்குகள் வரத்தான்செய்யும். தொடர்ந்து விட்டுக் கொடுத்து போகவும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். சுப காரியங்கள் நடக்கும். தடைபட்ட திருமணம் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். உறவினர்கள் வகையிலும் பிணக்குகள் வரும். எனவே அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அல்லது வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலர் தீவிர முயற்சி எடுத்து புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. அல்லது வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். மே மாதத்திற்கு பிறகு நிலைமை சாதகமாக அமையும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடந்த காலத்தைவிட சற்று முன்னேற்றம் காண்பர். வேலையில் பளு இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். இடமாற்ற பீதி தொடரும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வழக்கமான சம்பள உயர்வு. சலுகைகள் கிடைப்பதில் எந்த தடையும் ஏற்படாது. வியாபாரத்தில் முன்னேற்றத் துக்கான வழி கிடைக்கும். அதேநேரம் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். பணப்புழக்கம் இருக்கும்.. புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். எதிலும் பணத்தை முதலீடு செய்வதைவிட அறிவை பயன்படுத்தி வருவாயை தேடவேண்டும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதிக்குள்ளாகலாம். சிலர் தொழில் நிமித்தமாக இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது வரலாம். எதிரிகள் வகையில் எப்போதும் ஒரு கண் இருப்பது நல்லது. ஜனவரிக்கு பிறகு சனியின் வக்கிரம் காரணமாக தொழிலில் முன்னேற்றம் காணலாம். கலைஞர்கள் சிறப்பான பலன்களை காணலாம். புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். புகழ். பாராட்டு கிடைக்க தாமதம் ஆகும். அரசியல்வாதிகள், சமூகநல சேகவர்கள் சிறப்படைவர் மாணவர்கள் கடந்த ஆண்டு ஏற்பட்ட பிற்போக்கான நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றத்திற்கு வழி காண்பர். விவசாயிகள் பழைய கஷ்டத்தில் இருந்து சற்று மீளலாம். அதிக உழைப்பு இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலனும் கிடைக்கும். அதிகமான பண முதலீடு செய்ய வேண்டாம். தேவையான மகசூல் கிடைக்கும்.. பெண்கள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை பெறுவர். கணவர், மற்ற குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல் நலம் சீராக இருக்கும். கேதுவால் வயிறு தொடர்பான பிரச்சினை வரலாம். பரிகாரம் : முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லாததால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வரவும். விநாயகரை வணங்கி வாருங்கள். பத்திரகாளி அம்மன் வழிபாடு துணிவையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும், ஏழை சிறுவர்களுக்கு படிக்கவும் உதவி செய்யுங்கள்..

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - மீனராசி

ரகசியங்களை காப்பாற்றுவதில் வல்லவரான மீனராசி அன்பர்களே நீங்கள் ஞானிகளிடமும் பெரியோர்களிடமும் மிகுந்த மரியாதை கொண்டவர்கள் எந்த பிரச்சினையிலும் சிக்காமல் நழுவிவிடும் தன்மை படைத்தவர்கள். உங்களுக்கு ராகு 10-ம் இடமான தனுசிற்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. இங்கு அவர் பொருள் இழப்பையும் சிறு சிறு உடல்உபாதைகளையும் கொடுப்பார். ராகுவுக்கு இணையான நிழல் கிரகம் கேது 4-ம் இடமான மிதுனத்திற்கு மாறுகிறார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவர் உங்களை தீயோர் சேர்க்கைக்கு ஆளாக்கலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். டிசம்பர் முதல் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. எதையும் சற்று சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியது இருக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். ஆனால் டிசம்பருக்கு பிறகு வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. பணப்புழக்கம் அதிகம் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனால் சனியால் சிற்சில பிரச்சினை வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். டிசம்பருக்குள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதன்பின் சுபங்கள் தாமதப்படலாம். பிள்ளைகளாலும் பிரச்சினை வரலாம். அதிக முயற்சி எடுத்தால் புதிய வீடு கட்டலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டியதிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பர். டிசம்பருக்குப் பின் வேலையில் பளு அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத வகையில் இடமாற்றம் காண்பர். முதலில் அது பிடிக்காததாக இருந்தாலும் போகப்போக அது விருப்பமானதாக அமையும். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும். வேலை நிமித்தமாக சிலருக்கு குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலையும் உருவாகலாம். வியாபாரிகள் சிரத்தை எடுத்து முன்னேற வேண்டியது இருக்கும். லாபம் கிடைக்கும். அதேநேரம் செலவும் அதிகரிக்கும். தொழிலில் சிற்சில பிரச்சினை வரலாம். எனவே அதிக கவனம் தேவை அரசு வகையில் அனுகூலம் கிடைக்காது. வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை இருக்கும். கலைஞர்கள் தொடக்கத்தில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கும். ஆனால் டிசம்பருக்கு பிறகு சிரத்தை எடுத்தால்தான் ஒப்பந்தங்கள் வரும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். பொருளாதார வளம் இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைக்காது. மாணவர்கள் இந்த ஆண்டு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும் ஆசிரியர்களின் அறிவுரை உகந்ததாக இருக்கும்.. சிலருக்கு விரும்பிய பாடம் கிடைக்காமல் போகலாம்.. விவசாயம் சீராக நடக்கும். அதிக உடல்உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். கணவரின் அன்பு கிடைக்கும். அதே நேரம் குடும்ப நன்மைக்காக விட்டுக் கொடுத்து போக வேணடியது இருக்கும். வழக்குவிவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். கேதுவால் சிறுசிறு உபாதைகள் வரலாம். பிள்ளைகள் உடல் நலனிலும் அக்கறை காட்ட வேண்டிய திருக்கும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை இது அவ்வளவு சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. அவ்வப்போது தடங்கல்கள் குறுக்கிடலாம். எது எப்படியானாலும் அதனை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். பணப் புழக்கம் சீராக இருக்கும். மதிப்பு மரியாதை கூடும். அதே நேரம் அனாவசியமாக எதிலும் மூக்கை நுழைக்காமல் இருக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். சனி மற்றும் ராகுவால் சிற்சில பிணக்குகள் வரத்தான்செய்யும். தொடர்ந்து விட்டுக் கொடுத்து போகவும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். சுப காரியங்கள் நடக்கும். தடைபட்ட திருமணம் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். உறவினர்கள் வகையிலும் பிணக்குகள் வரும். எனவே அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அல்லது வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலர் தீவிர முயற்சி எடுத்து புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. அல்லது வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். மே மாதத்திற்கு பிறகு நிலைமை சாதகமாக அமையும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடந்த காலத்தைவிட சற்று முன்னேற்றம் காண்பர். வேலையில் பளு இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். இடமாற்ற பீதி தொடரும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வழக்கமான சம்பள உயர்வு. சலுகைகள் கிடைப்பதில் எந்த தடையும் ஏற்படாது. வியாபாரத்தில் முன்னேற்றத் துக்கான வழி கிடைக்கும். அதேநேரம் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். பணப்புழக்கம் இருக்கும்.. புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். எதிலும் பணத்தை முதலீடு செய்வதைவிட அறிவை பயன்படுத்தி வருவாயை தேடவேண்டும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதிக்குள்ளாகலாம். சிலர் தொழில் நிமித்தமாக இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது வரலாம். எதிரிகள் வகையில் எப்போதும் ஒரு கண் இருப்பது நல்லது. ஜனவரிக்கு பிறகு சனியின் வக்கிரம் காரணமாக தொழிலில் முன்னேற்றம் காணலாம். கலைஞர்கள் சிறப்பான பலன்களை காணலாம். புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். புகழ். பாராட்டு கிடைக்க தாமதம் ஆகும். அரசியல்வாதிகள், சமூகநல சேகவர்கள் சிறப்படைவர் மாணவர்கள் கடந்த ஆண்டு ஏற்பட்ட பிற்போக்கான நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றத்திற்கு வழி காண்பர். விவசாயிகள் பழைய கஷ்டத்தில் இருந்து சற்று மீளலாம். அதிக உழைப்பு இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலனும் கிடைக்கும். அதிகமான பண முதலீடு செய்ய வேண்டாம். தேவையான மகசூல் கிடைக்கும்.. பெண்கள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை பெறுவர். கணவர், மற்ற குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல் நலம் சீராக இருக்கும். கேதுவால் வயிறு தொடர்பான பிரச்சினை வரலாம். பரிகாரம் : முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லாததால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வரவும். விநாயகரை வணங்கி வாருங்கள். பத்திரகாளி அம்மன் வழிபாடு துணிவையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும், ஏழை சிறுவர்களுக்கு படிக்கவும் உதவி செய்யுங்கள்..

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - கும்ப ராசி

எப்போதும் உயர்ந்த சிந்தனையோடும், சுய கவுரவத்தோடும் வாழும் கும்ப ராசி அன்பர்களே, உங்களை விட தகுதி கூடியவர்களிடம் மட்டும் சகவாசம் வைத்து இருப்பீர்கள். எந்த நிலையிலும் யாருடைய தயவையும் நாடாமல் இருக்க விரும்புவீர்கள். இப்போது ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கும்பத்திற்கு செல்வது மிகச்சிறப்பான இடம் ஆகும். அவரால் இதுவரை இருந்து வந்த பிரச்சினை இனி இருக்காது, பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். ராகு நன்மை தரும்போது கேதுவால் நன்மை கிடைக்காது, கேது இப்போது 5-ம் இடமான மிதுனத்திற்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். எந்த தடைகளையும் முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். எனவே வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். டிசம்பருக்கு பிறகு நிலைமை சீரடையும். வீடு மனை வாங்கும் எண்ணம் படிப்படியாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். இதனால் சில குடும்பத்தில் தற்காலிகமாக பிரியும் நிலைகூட உருவாகலாம். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். டிசம்பருக்கு பிறகு வீட்டில் நிலைமை சற்று முன்னேற்றம் காணும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். பிள்ளைகள் வகையில் அனுகூலமான போக்கு இல்லை. அவர்களால் எந்த உதவியும் கிடைக்காது. உத்தியோகம் பார்ப்பவர்கள் சுமாரான நிலையில்தான் இருப்பர். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களை அண்டி இருக்கும் ஒருவித மந்த நிலை டிசம்பருக்கு பிறகு மறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இடமாற்றம் ஏற்படலாம். சற்று முயற்சி செய்தால் கோரிக்கைகள் நிறைவேறும். வேலையின்றி இருப்பவர்கள் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், வக்கீல்கள் போன்றோர் கடந்த காலத்தை விட நல்ல வளம் காணலாம். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வியாபாரத்தில் ராகுவால் லாபம் தொடரும். புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். இது அஷ்டமத்து சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். இருப்பதை பயன்படுத்தி முன்னேற வழிகாணுங்கள். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். பகைவர்களின் இடைïறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பாராட்டு புகழை விட பொருளாதார வளத்தில் மேம்பாடு காண்பீர்கள். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்காது. மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் மிகவும் பிற்போக்கான நிலையிலேயே இருந்திருக்கலாம். இனி நிலைமை மாறுபடும். ஆனாலும் கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதிருக்கும். முயற்சி எடுத்தால் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயத்தில் சீரான வருவாயை காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் விளைச்சல் அதிகரிக்கும். சிலர் புதிய சொத்து வாங்குவர். பெண்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வர். குடும்ப மேம்பாட்டுக்காக கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். வீண் மன உளைச்சல் மறையும். ஆனால் கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம். குறிப்பாக பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை முன்னேற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறுவீர் சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியாக வீட்டிற்கு குடிபுகுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிணக்குகள் மறையும். சனியால் சிலரது வீட்டில் கருத்துவேறுபாடு தொடரலாம். ஒருவருக்குகொருவர் விட்டுக்கொடுத்து போகவும். வேலையில் பின்தங்கிய நிலை மறையும். பல சிறப்பான பலனை காணலாம். வேலையில் பளு குறையும். விருப்?மான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடவும். உங்கள் ஆற்றல் தொடர்ந்து மேம்பட்டு இருக்கும். புதிய பதவி கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு வரும். சக ஊழியர்கள் உதவி கரமாக இருப்பர். வேலையின்றி இருப்பவர் களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்துக்கு குறை இருக்காது வருமானம் அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டிய திருக்கும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தை காணலாம். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். உங்கள் அறிவை பயன்படுத்தி முதல்போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். ஜனவரிக்கு பிறகு அனுகூலம் அதிகம் கிடைக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். மாணவர்கள் சிறப்பான பலனை காணலாம். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசிடம் இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை பார்க்கலாம்.. சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். பெண்கள் குதூகலமான பலனை காண்பர். கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகள் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டவும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச்செலவு குறையும். பரிகாரம்:- ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். துÖக்கைக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுங்கள். சனி சிறப்பாக இல்லாததால் நீங்கள் சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். ஏழைக் குழந்தைகள் படிக்க உதவி செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பத்திரகாளி அம்மனை வழிபடுங்கள்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - மகரராசி

மதிப்பு, கவுரவத்தோடு வாழ விரும்பும் மகரராசி அன்பர்களே நீங்கள் மனைவி மக்கள் என தன்குடும்பத்தினர் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டு இருப்பீர்கள். எப்போதும் செல்வாக்கோடு வாழ நினைப்பீர்கள். கேது நன்மை தரும் இடத்திற்கு வந்துள்ளார். அவர் இப்போது 6-ம் இடமான சிம்மத்திற்கு வந்திருப்பதன் மூலம் அந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும். மேலும் பொன்னும் பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். கேது நன்மை தரும் காலத்தில் ராகுவால் நற்பலனை தரஇயலாது. அவர் இடம்மாறி 12-ம் இடமான தனுசுவிற்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. இங்கு அவர் பொருள் விரயத்தையும், தூரதேச பயணத்தையும் கொடுப்பார். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொருளாதார வளம் மேம்படும். தடைகள் விலகி எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அலைச்சலும் பளுவும் கூடும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். ஆனால் சனியால் பங்கம் வரலாம். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு வாகனம் வாங்கலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் டிசம்பருக்கு பிறகு நல்ல வரனாக அமையும். உறவினர்கள் வகையில் பிணக்குகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அல்லது அவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை வெளிïர் மாற்ற வேண்டியது இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். வேலையில் பல்வேறு அனுகூலங்கள் நடக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். சிலர் பக்கத் தொழில் செய்து, வருவாயை அதிகரிக்க செய்வர். எதிர்பாராத மாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. வருமானம் அதிகரிக்கும். அதற்காக அசட்டையாக இருந்து விடாதீர்கள். சிந்தித்து தீரமாக உழையுங்கள். முன்னேற வழி கிடைக்கும். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை வந்தாலும் உடலை வருத்தி வளர்ச்சி காண்பீர்கள். எந்த தொழிலிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். அறிவை பயன்படுத்தி வருமானத்தை காணலாம். எதிரிகளின் இடைïறை முறியடிப்பீர்கள். கலைஞர்கள் நல்ல புகழையும் பாராட்டையும் குரு பகவான் கொடுப்பார். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணச்செழிப்பிலும் எந்த குறையும் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சிறப்பு அடைவீர்கள். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடம் பெறலாம். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகள் நல்ல வருவாயோடு காணப்படுவர். மகசூல் அதிகரிக்கும். குறிப்பாக நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் பயறுவகைகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். கைதொழில் செய்பவர்கள் மனநிம்மதியுடன் காணப்படுவர். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பம் உங்களால் சிறப்பு அடையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை கேதுவின் நன்மையும் தொடரும். இதன் மூலம் நல்ல பணப்புழக்கத்தை காணலாம். அதே நேரம் செலவுகள் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை முன்புபோல் இருக்காது என்றாலும் உங்கள் கவுரவத்திற்கு பங்கம் ஏதும் வராது. வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் வசதிகள் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.. கணவன்-மனÛவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் குருவின் பார்வையால் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலம் இருக்கும். புதிய வீடு, மனை வாங்க நினைப்பவர்கள் அதிக முயற்சி எடுத்தால்தான் நிறைவேறும். உத்தியோகத்தில் கடந்த காலத்தை போல் மிக உயர்வான பலன் கிடைக்காது. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் உழைப்புக்கேற்ற வருமானம் இருக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். சிலருக்கு வேலையில் பங்கம் வரலாம். சிலர் பொறுப்புகளை பறிகொடுக்கலாம். எனவே வேலையில் கவனமாக இருக்கவும்.. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரம் சீராக நடக்கும். கேதுவின் பலத்தால் லாபத்தில் எந்த குறையும் வராது. அலைச்சல் இருக்கும். வெளிïர் வாசம் இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தை காணலாம். வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெறுவர். புதிய தொழில் சுமாரான வருமானத்தை கொடுக்கும். அரசு உதவி கிடைக்கும். ஜனவரிக்கு பிறகு அனுகூலம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய புதிய ஒப்பந்தத்திற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். பண வரவு குறையாது. எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசிடம் இருந்து பாராட்டு. விருது போன்றவை சிலருக்கு கிடைக்க தாமதம் ஆகலாம். மாணவர்கள் சீரான பலனை காணலாம். தீவீர முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். அதற்காகமோசமான நிலை உருவாகாது, குருவின் பார்வையால் கல்வியில் சிறப்பு கிடைக்கும். விவசாயத்தில் உழைப்பிற்கு ஏற்ற பலனை காணலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். நவீன விவசாயத்தை பயன்படுத்தி நல்ல விளைச்சலை காணலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.பெண்கள் குதூகலமான பலனை காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பரிகாரம்: ராகு சிறப்பாக இல்லாததால் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். திருநாகேசுவரம் சென்று வரலாம். சனிக்கிழமை சனிபகவானை அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். கணவரை இழந்த மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதன் மூலம் தடையின்றி முன்னேற்றம் அடையலாம். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.துர்க்கை வழிபாடு தொடர வேண்டும். மேலும் குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் -தனுசு ராசி

குறிப்பிட்ட இடத்தை தாக்கும் அம்புபோல் குறிப்பிட்ட இலக்கை நோக்கி செல்லும் தன்மை கொண்ட தனுசு ராசி அன்பர்களே குடும்பத்தினர் மீது அதிக பாசம் கொண்டவர்கள். பெரியோர்களிடம் நன்மதிப்பு வைத்திருப்பீர்கள் ராகு உங்கள் ராசிக்கு வந்துள்ளார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். கேது இப்போது 7-ம் இடமான மிதுனத்துக்கு வந்திருக்கிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. இப்போதும் அவர் மனைவி வகையில் பிரச்சினையையும், அலைச்சலையும் தரலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பொருளாதார வளம் சீராக இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வருமானம் வரும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மதிப்பு மரியாதை கூடும். அதே நேரம் டிசம்பர் மாதத்திற்கு பிறகு வீண் விரோதத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். சிலர் சற்று முயற்சி செய்து புதிய வீடு-மனை வாங்கலாம். அதுவும் டிசம்பர் மாதத்திற்குள் கைகூடலாம். அதே போல் சுப காரியங்களும் டிசம்பருக்குள் நடந் தேறும். கணவன்- மனைவி இடையே அன்பு இருந்தாலும் அவ்வப்போது பிரச்சி னைகள் வரத்தான் செய்யும். நவம்பருக்கு பிறகு பிரிந்த குடும்பம் ஒன்று சேர வாய்ப்பு உண்டு. ஆனாலும் கூட அவ்வப்போது கருத்துவேபாடு வரத்தான் செய்யும். அனுசரித்து போவது நல்லது. பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டில் நிலவிய திருட்டு சம்பவங்கள் மறையும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். பதவி உயர்வு. சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுகூலமாக இருப்பர். இந்த சாதகமான போக்கு டிசம்பருக்குள் கிடைக்கலாம். அதன்பின் வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சலும் இருக்கும். சிலர் பொறுப்புகளை இழக்க நேரிடலாம். கலனம் தேவை. உங்கள் கோரிக்கைளை தீவிர முயற்சி எடுத்து நிறைவேற்றிக் கொள்ளவும். வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். லாபம் அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்த மந்த நிலை மறையும். புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரம் தொடங்கலாம். புதிய தொழிலை டிசம்பருக்குள் ஆரம்பிக்கலாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். பகைவர்களின் இடைïறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். சிலரிடம் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு. எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பேசவும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகைகள் டிசம்பருக்குள் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள். பாராட்டு புகழை விட பொருளாதார வளத்தில் மேம்பாடு காண்பீர்கள். அரசியல்வாதி கள், ஸ்திர நிலையை பெறுவர். முயற்சி எடுத்தால் புதிய பதவி கிடைக்கும். வெளிநாடு சென்று வருவீர்கள். போட்டிகள் நிலவும். அதை சமாளிக்கவும் தைரியம் வரும். டிசம்பருக்கு பிறகு எதையும் தீவிர முயற்சி செய்தே பெற வேண்டிய திருக்கும். மாணவர்கள் சீரான நிலையில் இருப்பர். சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும், அதே நேரம் குருவின் பார்வை சிறப்பாக அமைந்திருப்ப தால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். விவசாயிகள் நல்ல மகசூலை காண்பர். விளைச்சல் அதிகரிக்கும். குறிப்பாக நெல், சோளம், கேள்வரகு போன்ற பயிர் வகைகள் மூலம் அதிக வருவாய் காணலாம். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம், டி.பி. போன்ற உபாதைகளால் அவதிபட்டவர்கள் நவம்பருக்கு பிறகு பூரண குணம் அடைவர். மருத்துவச் செலவு குறையும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். அதே நேரம் முன்பு போல் இருக்காது. தீவிர முயற்சி எடுத்தால் எதையும் சிறப்பாக முடிக்க முடியும். மதிப்பு, மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். அதே நேரம் கேதுவால் மனைவி வகையில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். சற்று விட்டுக் கொடுத்து போகவும். உறவினர்கள் மத்தியில் அவ்வப்போது சிற்சில மனக்கசப்புகள் வரலாம். சற்று விலகி இருக்கவும். அல்லது அவர்களிடம் அனாவசிய பேச்சை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் எளிதில் கைகூடாது. தாமதம் ஆகலாம். குருவின் வக்கிர காலத்தில் குடும்ப நிலைமை மேம்படும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சீரான நிலையில் இருப்பர். வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். மேலும் வேலையில் இருந்த பிரச்சினைகள் இனி இருக்காது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டு தற்காலிகமாக பிரியவேண்டிய திருக்கும். வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். அதற்காக அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். எதிரிகளின் இடைïறு அவ்வப்போது தலைதூக்கலாம். அவர்கள் வகையில் எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும். அதேபோல் எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். ஜனவரிக்கு பிறகு நிலைமை ஓரளவு சீரடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக பெறமுடியாது. சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல முன்னேற்றம் காண்பர். உழைப்புக்கு தகுந்த மதிப்பெண்கள் கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டு சிறப்படையும். விவசாயத்தில் உழைப்புக்கு ஏற்ற பலனைதான் பெற முடியும். பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும் உடல்நலம் சிறப்பாக இருக்கும். கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். பரிகாரம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை வலம் வரவும். சனிபகவானுக்கு எள்சோறு படைத்து வணங்கலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்க தவறாதீர்கள். ஞானிகள், சன்னியாசிகளுக்கு உதவி செய்யுங்கள். ஏழைகள் படிக்க உதவி செய்யுங்கள். வசதி படைத்த தொழில் அதிபர்கள் முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யலாம். முருகனை தரிசனம் செய்து வாருங்கள். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். காக்கைக்கு அன்னமிடுங்கள்

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் -விருச்சிக ராசி

தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக விளங்கும் விருச்சிக ராசி அன்பர்களே, உங்களுக்கு பிறர் செய்த தூரோகத்தை எளிதில் மறந்துவிடாத குணம் கொண்டவர்கள். ராகு இப்போது 2-ம் இடமான தனுசுக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையையும் தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். கேது இப்போது 8-ம் இடமான மிதுனத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனால் பலன்கள் மாறுபடும். இங்கு அவர் உடல்உபாதைகளை தரலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லை என்றாலும் சனியால் எண்ணற்ற பலனை காணலாம். எடுத்த காரியம் அனைத்தும் கைகூடும். உங்கள் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதை சுமாராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு நிலவும். ஆனாலும் அவ்வப்போது கருத்துவேறுபாடும், பிணக்குகளும் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகலாம். உறவினர்கள் வகையிலும் சலசலப்பு ஏற்படலாம். எனவே அவர்கள் வகையில் அதிக நெருக்க வேண்டாம். அல்லது அவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். தாமதமானாலும் அது நல்ல வரனாவும் அமையும். சிலர் புதிய வீடு-மனை வாங்கலாம். அல்லது தற்போதுள்ளதைவிட வசதியான வீட்டுக்கு குடிபுகலாம். புதிய வாகனம் கிடைக்கும். உத்தியோகத்தில் சுமாரான நிலையே இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் எதிர்பாராத இடத்துக்கு மாற்றல் ஆகலாம். இதனால் தற்காலிகமாக குடும்பத்தைவிட்டு பிரிய நேரிடலாம். டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு வேலையில் ஒருவித தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். வீண் அலைச்சல் இனி இருக்காது. நீங்கள் சென்ற இடமெல்லாம் காரிய அனுகூலம் ஏற்படும். பொருள் விரையமும் ஏற்படாது. சேமிப்பு அதிகரிக்கும். நல்ல வருமானத்தை காண்பர். புதிய தொழில் தொடங்கலாம். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் நல்ல வளத்தை காணலாம். எதிரிகளின் சதியை முறியடிப்பீர்கள். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக கிடைக்காது. அதே நேரம் பொருளாதார நிலையில் எந்த பிற்போக்கான நிலையும் இருக்காது. அரசிடமிருந்து இருந்து பாராட்டு, வெகுமதி கிடைக்காமல் போகலாம். சமூக நல சேவகர்கள், அரசியல்வாதிகள் நல்ல வசதியுடன் காணப்படுவர். எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்காது. மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். விவசாயத்தில் நல்ல லாபத்தை காணலாம். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. பெண்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருப்பர். கணவரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். பொன்,பொருள் வந்து சேரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உடல்நலம் சுமாராகவே இருக்கும். கேதுவால் உஷ்ணம் மற்றும் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 2010 ஜுன் முதல் 2011 மே வரை மதிப்பு மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். முன்னேற்றம் ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறி , மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஓங்கும். பிரிந்து இருந்த உறவினர்கள் ஒன்று சேருவர். ஆனாலும் ராகுவின் சாதகமற்ற நிலையினால் தம்பதியினர் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உத்தியோ கத்தில் முன்னேறும் வந்து விட்டது. வேலைப்பளு குறையும். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து அனுசரணை யுடன் நடப்பர். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காணலாம். லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். புதிய தொழில் தொடங்கலாம். நல்ல தொழிலில் முதலீடு போடலாம். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை அடியோடு மறையும். ராகுவால் வரும் பிரச்சினையை எளிதில் முறியடிப்பீர்கள். கலைஞர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த பாராட்டுகள், விருதுகள் இனி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்க பெறுவர். சமூகத்தில் ஒரு அந்தஸ்க்கு உயர்த்தப்படுவர். மாணவர்கள் நற்கல்வி பெறுவர். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவர். நல்லவர்கள் சேர்க்கை மற்றும் ஆசிரியர்களின் அறிவுரை உங்களை மேலும் உயர்த்தும். விவசாயிகள் நல்ல வளர்ச்சி காண்பர் நெல் சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். தீர்ப்புகள் சாதகமாக அமையும் இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்.. பெண்கள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். உடல்நலம் தொடர்ந்து சுமாராக இருக்கும். உஷ்ணம் தொடர்பான உபாதைகள்வரலாம். மனத்தளர்ச்சி மறையும். பரிகாரம்: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். திருநாகேசு வரம்., திருப்பெருப்பள்ளம், திருக்காளத்தி போன்ற ஏதாவது ஒரு தலத்துக்கு சென்று வரலாம். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். விதவை மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். பவுர்ணமி நாளில் கேதுவுக்கு அர்ச்சனை செய்யலாம். மேலும் அன்று வீட்டில் விளக்கு ஏற்றி சித்திரபுத்திரநாயனாரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதனால் நன்மை அதிகரிக்கும்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் -கன்னி ராசி

மென்மையான அனுகுமுறையை கொண்ட கன்னி ராசி அன்பர்களே உங்களது பண்பும், பணிவும், நேர்மையும் எல்லோரையும் மிக எளிதில் கவரும். பொதுவாக நல்ல செல்வாக்கும், செல்வமும் படைத்தவர்களாக இருப்பீர்கள். நயமான பேச்சும் நம்பகத்தன்மையும் கொண்டவர்கள் நீங்கள். கேது இப்போது 10-ம் இடமான மிதுனத்திற்கு சென்றுள்ளார். இது சிறப்பானது என்று சொல்லமுடியாது. அவர் உடல் உபாதைகளை தரலாம். ராகு இப்போது 4-ம் இடமான தனுசுவுக்கு வந்துவிட்டதால் அந்த பிரச்சினை மறையும். அதே நேரம் இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும் சிற்சில பிரச்சினையையும் உருவாக்கலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பொருளாதார வளம் சீராக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். சிலரது பயணம் வெற்றி அடையாமல் போகலாம். உங்களின் முயற்சி அவ்வளவு எளிதில் நிறைவேறாது. முக்கிய காரியங்களை டிசம்பருக்குள் செயல்படுத்துங்கள். அதில் வெற்றி கண்டுவிடலாம். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். டிசம்பருக்கு பின் வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சீரான வசதி இருக்கும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சினை மறையும். அதன்பின் வீட்டில் ஒற்றுமை ஏற்படும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் டிசம்பருக்குள் நடைபெறும். அதன்பின் தடைகள் வரலாம். வீடு-மனை வாங்க யோகம் கூடி வரவில்லை. சில காலம் பொறுத்திருப்பது நல்லது. உத்தியோகத்தில் ஆரம்ப காலத்தில் பல முன்னேற்றங்களை காண்பர். முக்கிய கோரிக்கைகளை டிசம்பருக்குள் நிறைவேற்றி கொள்ளுங்கள். அதன்பின் வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்களின் உதவியை நாடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். கூட்டாளிகள் யாரையும் நம்பி விட வேண்டாம். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். சிலருக்கு வெளிïர் பயணம் அனுகூலத்தை கொடுக்காது. குரு, சனியின் பார்வைகளால் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படமாட்டீர்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறப்பெற்று முன்னேற்றம் காணலாம். டிசம்பருக்கு பிறகு சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த மதிப்பு பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். உங்களுக்கு உரிய பெருமை பாராட்டு தட்டி பறிக்கப்படலாம். அரசியல்வாதிகள் மற்றும் பொது நல ஊழியர்கள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சுமாரான காலம்தான். சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். சிலருக்கு எதிர்பார்த்த பாடப்பிரிவு கிடைக்காமல் போகலாம். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை தான் பெற முடியும்.அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைவிட்டு போகலாம். வழக்கு விவகா ரங்கள் சுமாராக இருக்கும். தீர்ப்பு பாதகமாகவும் அமைய வாய்ப்பு உண்டு. பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். பித்தம், மயக்கம் மற்றும் கண் தொடர்பான உபாதைகள் வரலாம். 2010 ஜுன் முதல் 2011 மே வரை வீடு மனை வாங்க யோகம் கூடி வரும். வண்டி வாகனங்கள் வாங்கலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். எடுத்த காரியம் அனுகூலம் ஆகும். குடும்பத்தில் குதூகலம் ஆரம்பமாகும். தம்பதியின ரிடையே ஒற்றுமை மேலோங்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்றுசேரும். உறவினர்கள் உங்களை நாடி வருவர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல சிறப்பான வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு வாங்குவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியாக வீட்டிற்கு குடிபுகுவர். உத்தியோகம் பார்ப்பவர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். வேலையில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் கருணை கிடைக்கும். சிலர் இடமாற்றம் காண்பீர்கள். அதுவும் விரும்பிய இடமாக அமையும். உங்கள் திறமை பளிச்சிடும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகள் சிறப்படைவர். அதிக வருமானத்தை காணலாம். புதிய வியாபாரம் ஓரளவு லாபத்தை தரும். ஆனால் இது ஏழரை சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை இருக்கத்தான் செய்யும். சற்று கவனம் தேவை. கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ் பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும் பணமும் கிடைக்கும். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு சிறப்பை காணலாம். பலருக்கு வெற்றி கிட்டும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயம் சிறப்படையும். நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். பெண்கள் குதூகலமான பலனை காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும், உடல் நலனை பொறுத்தவரை கண் மற்றும் பித்தம் மயக்கம் போன்ற உபாதைகள் தொடரலாம். தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியது வரும். பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக் கும்போது நவக்கிரகத்தை சுற்றி வாருங்கள். ராகு காலத்தில் பைரவ ருக்கு பூஜை செய்யுங்கள். முடிந்தால் திருநாகேசுவரம், கீழ்பெரும்பள்ளம் அல்லது திருக்காளத்தி ஸ்தலத்துக்கு சென்று வரலாம். ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு முல்லை மாலை அணிவித்து வணங்குங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு துர்க்கை பூஜையில் கலந்து கொள்ளவும். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு சாப்பிடுங்கள்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் -கடக ராசி

அதிகாரத்துக்கு அடிபணியாமல் அன்புக்கு கட்டுபட்டு நடக்கும் கடக ராசி அன்பர்களே நீங்கள் யாரையும் எளிதில் நம்பிவிடுவீர்கள். கையில் இருக்கும் பணத்தை நொடிப் பொழுதில் செலவு செய்யும் தன்மை கொண்டவர்கள். ராகு இப்போது 6-ம் இடமான தனுசுவுக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம். இனி மேற்கண்ட இடர்பாடுகள் வராது. அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற் றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலத்தை கொடுப்பார். கேது 12-ம் இடமான மிதுனத்துக்கு போகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவர் பொருள் இழப்பையும் உடல் உபாதை களையும் தரலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை முன்னேற்றங்கள் அதிகரிக்கும். நல்ல பொருளாதார வளத்தை காணலாம். எந்த ஒரு காரியத்தையும் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்க் கவும்.குடும்பத்தில் குதூகலம் அதிகம் இருக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தீவிர முயற்சியின் பேரில்தான கைகூடும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் மத்தியில் வீண் விரோதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அவர்களிடம் வீண்விவாதங்களை தவிர்க்கவும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். புதிய வாகனம் வாங்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடக்கத்தில் சிறப்பான பலனை கண்டாலும், அதிக வேலைப்பளு இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப்போகவும். அலைச்சல் கூடும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாம். சக ஊழியர்களிடமும் பகைக்காமல் நடந்து கொள்ளவும். முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். வியாபாரம் சிறப்படையும். நல்ல வளத்தை காணலாம். எந்த தொழிலிலும் அதிக வருமானத்தை காணலாம். புதிய வியாபாரம் சிறப்பான லாபத்தை தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக் கும். இரும்பு வியா பாரம், தரகு போன்ற தொழில் நல்ல வளர்ச்சி அடையும். வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் இறங்க லாம். சேமிப்பு அதிகரிக்கும். கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் செலவு அதிகரிக்கலாம். கலைஞர்கள் விடா முயற்சியோடு உழைத்து வெற்றி காண்பீர்கள். விருது, பாராட்டு போன்றவை கிடைப்பதில் தாமதமாகும். ஆனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் நல்ல வளமாக காணப்படுவர். பணத்தால் காரியம் சாதிக்கும் நிலை உருவாகும். மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு போல் இருக்காது. விரும்பிய பாடம் கிடைக்க அதிகமாக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படாது. ஆசிரியர்களின் ஆலோசனைப்படி நடந்தால் முன்னேற்றம் காணலாம். விவசாயத்தில் நல்ல வருமா னத்தை காணலாம். புதிய சொத்து வாங்கலாம். நெல், கோதுமை, சோளம் போன்றவற்றில் சுமாரான மகசூலை காண்பர். நஷ்டம் தவிர்க்கப்படும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் குதூகல நிலையிலே இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் அன்பை பெறுவர். பிள்ளைகள் நலனில் தனி அக்கறை காட்டவும். உடல்நலம் சுமாராக இருக்கும். கேதுவால் சிறு உபாதைகள் வந்தாலும் பாதகம் இருக்காது. மனதில் ஒரு வித தளர்ச்சி ஏற்படும். பிள்ளைகள் உடல் நலனில் சற்று அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை நல்ல பொருளாதார நிலை ஏற்படும். காரிய அனுகூலங்கள் ஏற்படும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். ஆகஸ்டு முதல் நவம்பர் வரை சுப நிகழ்ச்சிகளை தவிர்க்கவும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய வீடு மனை வாங்க யோகம் மேலும் அதிகரிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காணபர். கடந்த சில மாதங்களாக நீங்கள் அனுபவித்த பிரச்சினைக்கு முடிவு ஏற்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகள் கடந்த காலத்தை விட அதிக முன்னேற் றங் களை காணலாம். தொழில் சிறப்படையும். புதிய தொழில் அனுகூலத்தை தரும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். ஜனவரிக்குள் தொடங்குவது நல்லது. அது நல்ல வளர்ச்சியை அடையும். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவரை இழந்த வயதான மூதாட்டியிடம் இருந்து கிடைக்கும் உதவி மூலம் முன்னேற்றம் காணலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக் கும். புகழ், பாராட்டு கிடைக்கும். அரசி யல்வாதிகள் சமூகநல சேவ கர்கள் மேம்பாடு காண்பர். மாண வர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். நல்ல மதிப்பெண் பெறலாம். விரும் பிய பாடம் கிடைக்கும். விவசா யத்தில் அதிக மகசூல் வரும். புதிய சொத்து வாங்கலாம். சிலர் நவீன முறையில் விவசாயத்தில் ஈடுபட்டு அதிக வருமானத்தை காணலாம். நெல், கோதுமை சோளம், மொச்சை. மற்றும் மானாவாரி பயிர்கள் சிறப்பான மகசூலை தரும். பெண்கள் முன்னேற்றம் காண்பர். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பரிகாரம்:- நவக்கிரகங்களில் கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள் ஆசிரியர்கள், ஞானிகள். சன்னியாசிகள் ஆகியோருக்கு இயன்ற உதவி செய்யுங்கள் . பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள் மேலும் சன்னியாசி களுக்கும் இயன்ற உதவி செய்யலாம். இதனால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் -மிதுனராசி

நல்ல பேச்சாற்றலும், சீரிய சிந்தனையும் கொண்ட மிதுனராசி அன்பர்களே யார் தயவும் இன்றி சொந்த காலில் நின்று முன்னேற நினைப்பீர்கள். தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். ராகு 7-ம் இடமான தனுசுவுக்கு மாறியுள்ளார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. இங்கு அவரால் இடப்பெயர்ச்சியையும் தரம்தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். கேது இப்போது உங்கள் ராசிக்கு வந்துள்ளார், இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் காரிய தடையையும் உடல்உபாதையையும் தரலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை காரிய அனுகூலம் ஏற்படும். ஆனாலும் உங்கள் முயற்சியில் சிற்சில தடைகள் வரத்தான் செய்யும். அதை உங்கள் அனுகுமுறையால் எளிதில் முறியடிக்கலாம். பணப்புழக்கம் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். குடும்பத்தில் சிறப்புகள் பல காணலாம். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். ராகு சிறப்பாக இல்லாததால் சிற்சில கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலர் கடன் வாங்கி புதிய வீடு மனை வாங்கலாம். வீட்டில் நிகழும் திருட்டு சம்பவங்கள் அனைத்தும் அடியோடு மறையும். உத்தியோகஸ்தர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவீர்கள். வேலையில் திருப்தி காண்பீர்கள். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப்பெறலாம். வியாபாரிகள் முன்றேற்றம் காண்பர். லாபம் அதிகரிக்கும். எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை. சிலர் தரம் தாழ்ந்த பெண் சேர்க்கையால் அவதிபடலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். புதிய தொழில் தொடங்கலாம். ஆனால் அதற்கு பணமுதலீட்டைவிட புத்தியை செயல்படுத்தி ஆரம்பிக்க வேண்டும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பொருள் விரயம் இருக்காது. கலைஞர்கள் சிறப்படைவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். போட்டி கடுமையாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பர். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் புதிய பதவி கிடைக்கப்பெறுவர். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான பலனை பெறுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நெல், கோதுமை, கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சீராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். குழந்தைகளால் பெருமை காண்பீர்கள். உடல் நலனை பொறுத்தரை சீராக இருக்கும். சிலர் வீண் மனஉளைச்சலில் இருப்பர். நெருப்பு தொடர்பான உபாதைகள் பூரண குணம் அடையும். பரிகாரம்:- நவகக்கிரகங்களில் ராகு-கேவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு துணை நிற்கும். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள். ஞானிகளுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள். 2010 ஜுன் முதல் 2011 மே வரைபொருளாதர நிலையில் முன்பு போல் இல்லாவிட்டாலும் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு பண வரவு இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. ஜனவரிக்கு பிறகு நல்ல பணப்புழக்கம் இருக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். முக்கிய காரியங்களை குடும்ப பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் நிறைவேற்றவும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். ஆனால் குருவின் வக்கிர காலமான ஆகஸ்டு முதல் டிசம்பருக்குள் கைகூடும். அதற்காக அதிக முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். கணவன்-மனைவி இடையே பிணக்குகள் அவ்வப்போது தலைதூக்கும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.. உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அல்லது அவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகத்தில் கடந்த காலத்தைவிட அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் போகலாம். சிலர் பதவியையோ அல்லது தங்கள் வகித்து வந்த பொறுப்பையோ விட வேண்டிய நிலை ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். மேல் அதிகாரிகளை அனுசரித்து போகவும். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும். ஆகஸ்டு முதல் நவம்பர் வரையிலும் மே மாதத்திற்கு பிறகும் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். இந்த காலம் நீங்கள் தொழில் ரீதியாக நிறைய அனுபவத்தை காணலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். இருப்பதை கொண்டு சிறப்பாக நடத்தினாலே போதும். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஜனவரிக்கு பிறகு நிலைமை மேம்படும். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் சற்று முயற்சி எடுத்தால் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். ஆனால் பண வரவு ஓரளவு இருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். எதிர்பார்த்த பதவி பொறுப்பு கிடைக்காது. மாணவர்கள் கடந்த ஆண்டுபோல இல்லாவிட்டாலும் சீரான பலனை காணலாம். அதிக முயற்சி எடுத்து படித்தால் வெற்றி கிட்டும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்கேற்க வேண்டும். சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போகவேண்டும். உடல்நலம் சுமாராக இருக்கும். சிற்சில உபாதைகள் வரலாம். தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியது வரும். பரிகாரம்:- நவகக்கிரகங்களில் ராகு-கேவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு துணை நிற்கும். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள். ஞானிகளுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் -ரிஷப ராசி

அமைதியான அறிவுபூர்வமான எண்ணம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அதில் ஏற்படும் தடைகள், தடங்கலை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு இந்த ராகு பகவான 8-ம் இடமான தனுசுவுக்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பானது என்று சொல்ல முடியாது. அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். கேது 2-ம் இடமான கடகத்திற்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் அரசு வகையில் சிக்கலையும், பொருள் திருட்டையும் ஏற்படுத்தலாம். 2009 நவம்பர் முதல் 2010 மே வரை பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். அதேநேரம் செலவுகளும் ஏற்படும். அனாவசிய செலவை தவிர்க்கவும். சிக்கனம் தேவை. உங்கள் முயற்சியில் தடை கள் வரலாம். ஆனாலும் அதை முறியடித்து வெற்றி காணலாம். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண்விவாதங் களில் ஈடுபட வேண்டாம். அதே நேரம் உங்கள் செல்வாக்குக்கு எந்த பங்கமும் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் கள் வாங்குவதை தவிர்க்கவும். திரு மணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவி னர் வகையிலும் அவ்வளவு அன்னி யோனியம் காணப்பட வில்லை. அவர்களிடம் அதிக நெருக்கம்வேண்டாம். அல்லது வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். சற்று கனவம் தேவை. வீடு-மனை வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக ஒத்தி போடுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சீரான பலனை காணலாம். வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். சிலர் வேலையை விட்டு விலக தோன்றும். எந்தக் காரணத்தை கொண்டும் வேலையை விட வேண்டாம். குருவின் பார்வையால் எந்த பங்கமும் ஏற்படாது. வியாபாரம் சிறப்படையும். பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவீர்கள். ஆனாலும் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். வீண் பணச் செலவு ஏற்படும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. சிலர் வருமான வரித்துறையின் திடீர் சோதனைக்கு ஆளாகலாம். எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்திருக்கவும் புதிய தொழிலை இந்த காலத்தில் தொடங்க வேண்டாம். 2010 ஜனவரிமுதல் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.கலைஞர்கள் அதிக முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். பண வரவு சிறப்பாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் எதிர்பாÖத்த பதவி கிடைக்காமல் போகலாம். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும் குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். விவசாயத்தில் உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக கணவரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். அண்டை வீட்டாரிடம் வளவள பேச்சு வேண்டாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை குருபகவான் சாதகமான இடத்துக்கு வந்துள்ளதால் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். மேலும் குருவின் 7 மற்றும் 9-ம் இடத்துப்பார்வைகளாலும் நன்மைகள் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். மதிப்பு-மரியாதை அதிகரிக்கும். உங்கள் அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிணக்குகள் குறையும். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல் சனியும் ராகுவும் சாதகமாக இல்லாததால் தம்பதியர் இடையே சிற்சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அதேநேரம் வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்க பெறுவர். சிலர் புதிய வீடு வாங்குவர். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இதுவரை தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவர். உத்தியோகஸ்தர்களுக்கு பிற்போக்கான நிலை மாறும். வேலையில் முன்னேற்றம் காணலாம். புதிய பதவி வர வாய்ப்பு உண்டு. சம்பள உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும். அதேபோல் வேலையின்றி இருப்பவர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆகஸ்டு முதல் நவம்பர் வரை சற்று கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குருவால் நல்ல லாபத்தை பெறலாம். வேலையின்றி இருப்பவர்கள் புதிய தொழிலை தொடங்கலாம். அதில் நல்ல வருமானம் கிடைக்கும். அரசு வகையில் தொடர்ந்து அனுகூலம் காணப்படவில்லை. எனவே தொடர்ந்து வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். எதிரிகளிடம் ஒரு கண் இருப்பது நல்லது. கலைஞர் களுக்கு. பின்தங்கிய நிலை மாறும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். .பண வரவு சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் நற்பெயரும், புகழும் கிடைக்க பெறுவர். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றமான பலனை காணலாம். கடந்த ஆண்டு இருந்த தேக்கநிலை இருக்காது. விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகள் முன்னேற்றமான பலனை காணலாம். தீவிர முயற்சியின் பேரில் புதிய சொத்துக்களை வாங்கலாம். மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், கோதுமை போன்ற தானியங்கள் நல்ல மகசூலை கொடுக்கும். பெண்கள் முன்னேற்றம் அடைவர். குழந்தை பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நலம் சிறப்பாக இருக்கும். கேதுவால் நெருப்பு தொடர்பான சிற்சில பிரச்சினைகள் வரலாம். பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். சன்னியாசிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ராகுவும், கேதுவும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பத்திரகாளியம்மனை வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். சனி பகவானுக்கும் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது யானைக்கு கரும்பு கொடுங்கள். இதனால் இடையூறுகள் மறையும்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - மேஷ ராசி

எதிலும் முதன்மையை விரும்பும் மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் உங்களுக்கு முக்கியத் துவம் இல்லா இடத்தில் தலையை நீட்டமாட் டீர்கள். வெற்றியையே குறிக்கோளாக கொண்டு இருப் பீர்கள். சற்று முன்கோபம் கொண்டவராக இருந்தாலும் மென்மையான மனதை பெற்றவர்கள். ராகு 9-ம் இடமான தனுசுவுக்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் இதற்கு முன்பு போல் கெடுபலனை தர மாட்டார். 9-ம் இடத்தில் இருக்கும் போது, உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்.எதிரிகளின் இடைïறு தலைதூக்கும்.பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும் என்பது பொது விதி. கேது 3-ம் இடமான மிதுனத்துக்கு வந்து பல்வேறு நன்மைகளை தருவார். அதாவது இறை அருளையும் பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார். 2009 நவம்பர் முதல் 2010 ஏப்ரல் வரை: தெய்வ அனுகூலம் நிறைந்து இருக்கும். இதனால் ஆனந்த வாழ்க்கை ஆரம்பமாகும். நல்ல பொருளாதாரம் இருக்கும். பழைய கடன்கள் அடைபட்டு சேமிப்பு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். மதிப்பு மரியாதை கூடும்.புதிய இடம், வீடு வாங்கலாம். புதிய வாகனம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த பிணக்குகள் மறையும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். விருந்து விழா என சென்று வருவீர்கள். உறவினர்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை விலகும். வேலையில் ஆர்வம் பிறக்கும். நல்ல வளர்ச்சி காணலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு , சம்பள உயர்வு கிடைக்கும். ஏதோ காரணத்தால் வேலையை விட்டு விலகியவர்கள் அதே வேலையை மீண்டும் கிடைக்க பெறுவர். வேலையின்றி இருக்கும் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். தொழில் வளர்ச்சி அடையும். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழில் தொடங்கலாம். இரும்பு தொடர்பான வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தை காணலாம். எதிரிகளின் தொல்லை அடியோடு மறையும். அவர்களின் சதி இருக்குமிடம் தெரியாமல் போகும். அரசு உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகநல சேவகர்கள் மேம்பாடு காண்பர். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். விவசாயத்தில் அதிக மகசூல் வரும். நெல், கோதுமை சோளம், மொச்சை. கரும்பு, எள் பனைத் தொழில் எந்த காலத்திலும் சிறப்பை தரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை கேது தொடர்ந்து 3-ம் இடத்தில் நின்று நன்மைகளை கொடுப்பார். சனிபகவானின் நற்பலன்களும் தொடரும். ஆனால் குரு பகவான் 12-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளார். இது சுமாரான நிலையே. ஆனாலும் குருபகவான் 2010 ஜுலை 28 முதல் டிசம்பர் 30-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். இது உங்களுக்கு சாதகமானது ஆகும். எனவே பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண்விவாதத்தை தவிர்க்கவும். அதேநேரம் குருவின் வக்கிர காலத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படலாம். சில காலம் பொறுத்திருப்பது நல்லது. சிலருக்கு குரு வக்கிர காலத்தில் திருமணம் கைகூடலாம். செலவை சற்று குறைத்துக் கொள்ளவும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். தூரத்து உறவினர்கள் வகையில் இருந்து எதிர்பாராத விரும்பத் தகாத செய்தி வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்புபோல் அதிக அனுகூலங்கள் கிடைக் காது. வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல் கூடும். ஆனால் உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சக ஊழியர்களிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். ராகுவால் எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். தடைகளை உடைத்தெறியும் வல்லமை பெறுவீர்கள். புதிய தொழில் தொடர்ந்து அனுகூலத்தை கொடுக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். செலவு அதிகரிக்கும். பணவிஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. பிப்ரவரி முதல் புதிய முதலீட்டை தவிர்க்கவும். கலைஞர்கள் தீவிர முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிட்டும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ், பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல் வாதிகளுக்கும் எதிர்பார்த்த பதவி கிடைக்காது. மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும். அடுத்த கல்வி ஆண்டுக்கு மிகவும் சிறப் பாக அமையும். விவசாயி களுக்கு கரும்பு, எள், பயறுவகை மற்றும் பனை பொருட்களில் நல்ல லாபம் கிடைக்கும். சிலர் அதிக முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அலைச்சலும் பளுவும் இருக்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பரிகாரம் :- பத்திரகாளி அம்மன் வழிபாடு உங்களை மேலும் உயர்த்தும். ராகு பகவானுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அர்ச்சனை செய்யுங்கள். உளுந்து, படைத்து வணங்கலாம். வசதிபடைத்தவர்கள் திருநாகேசுவரத்திற்கு சென்று வரலாம். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யலாம். குருபகவானுக்கும் ராகுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். திருச்செந்தூர், ஆலங்குடி, திட்டக் குடி., பட்டமங்கலம்(சிவகங்கை மாவட்டம்) போன்ற ஏதாவது ஒரு குருத்தலத்திற்கு சென்று வாருங்கள். ஏழைகள் படிக்கவும், வயதான மூதாட்டிகளுக்கும் உதவி செய்யலாம்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் ராசி

மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லும் குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே நீஙகள் நீதி நேர்மையுடன் வாழ விரும்புவீர்கள். சிறந்த நண்பர்களையும் நல்ல உறவினர்களையும் பெற்றவர்களாக இருப்பீர்கள். ராகு இப்போது 3-ம் இடமான தனுசுவிற்கு வந்து பல்வேறு நன்மைகளை தரஉள்ளார். குறிப்பாக காரிய அனுகூலத்தையும், நல்ல சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். ராகு நன்மை தரும்போது அவருக்கு நேர் எதிரே உள்ள கேதுவால் நன்மை தர இயலாது. அவர் 9-ம் இடமான மிதுனத்திற்கு போகிறார். அங்கு அவர் பொருள் இழப்பையும், காரிய தோல்வியையும் தரலாம். 2009 நவம்பர் முதல் 2010 மே வரை பொருளாதார பிரச்சினையில் முன்னேற்றம் காணலாம். பணவரவு இருந்து கொண்டே இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றியை அடையலாம். எந்த தடைகள் வந்தாலும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குதூகலமாக இருக்கும். கணவன்-மனÛவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான எல்லா வசதிகளும் கிடைக்கும். தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அது நல்ல வரனாகவும் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருட்டு தொந்தரவு இனி இருக்காது. உறவினர்கள் வகையில் இருந்த பிணக்குகள் மறையும். அவர்களால் அனுகூலம் கிடைக்கும். சிலர் சற்று முயற்சி எடுத்து வீடு-மனை வாங்கலாம். இதற்காக கடன் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். டிசம்பருக்கு பிறகு நற்பலன்கள் அதிகமாக கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்குதடையின்றி கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்துக்கு குறை இருக்காது. வருமானம் அதிகரிக்கும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலர் தொழில் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தை காணலாம். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம். அப்படியே தொடங்கினாலும் உங்கள் அறிவை பயன்படுத்தி முதல் ஏதும் போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அதுவும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயரில் தொடங்கவும். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பண வரவு குறையாது. எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசிடம் இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் பாக்கியம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூக நல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டைவிட கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கபெறலாம். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நெல் கோதுமை கேழ்வரகு சோளம் மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல வருமானத்தை தரும். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். ஆனால் புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் குதூகலமான பலனை காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பித்தம் மயக்கம் மற்றும் கண் தொடர்பான உபாதைகளால் அவதிபட்டு வந்தவர்கள் குணம் அடைவர். மருத்துவச்செலவு குறையும்.. தாயாரின் உடல் நலம் மேம்படும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை உங்களின் முயற்சி வெற்றி அடையும். கேதுவால் அவ்வப்போது தடைகள் வந்தாலும் அதை முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். வீட்டில் மகிழ்ச்சிக்கு எந்த குறை இருக்காது. சீரான வசதி இருக்கும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் வகையிலும் அனுகூலமான போக்கு காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தடை படலாம். அதே நேரம் தீவிர முயற்சியின் பேரில் ஆகஸ்டு முதல் டிசம்பருக்குள் சுபங்கள் நடக்கலாம். வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்காமல் போகலாம். மே மாதத்தில் இருந்து நிலைமை சிறப்படையும். உத்தியோகஸ்தர்கள் முன்புபோல் அனுகூல பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியது இருக்கும். வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டிய திருக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். மே மாதத்திற்கு பிறகு வருமானம் அதிகரிக்கும். கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். எதிர்பார்த்த மதிப்பு பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள் மற்றும் பொது நல ஊழியர்கள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு உங்களுக்கு சுமாராகவே இருக்கும். சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை தான் பெற முடியும். சிலர் அதை விட குறைவான வருமானம் கூட காணலாம். எனவே அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம்.. வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும் வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பளுவை சுமக்க வேண்டிய திருக்கும். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவ செலவு குறையும் சிலர் மனத்தளர்ச்சியுடன் காணப்படுவர். பரிகாரம் கேதுவும் சனியும் சாதகமாக இல்லாததால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உணவு சாப்பிடுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails

Member of Indiblogger

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines